Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

அழகு குறிப்பு

லேடீஸ் டிப்ஸ்

அழகுக்கு அழகு சேர்க்க


அடர்த்தியான தலைமுடிக்கு


அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!













1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,
அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.

3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.

(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.
பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)


பெண்கள் சிவப்பழகை பெற















கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.


கண் இமைகள் மற்றும் புருவம் அழகு


கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க...













தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.
இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!


அழகுக்குறிப்பு















வரண்ட சருமத்திற்க்கு
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,
ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!

சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வழ வழ முகத்திற்க்கு
பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ப்ரகாசமான முகத்திற்க்கு
ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர, பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!
முக்கியமான அழகுக்குறிப்பு
எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!


முக பருவை போக்க..


அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்
இதை தடுக்க...
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.

பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.

எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்


பார்த்து படித்துவிடு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும். ----சிந்து

மறுமொழிகள்

Re: அழகு குறிப்பு
super dips thanks a lot mam
Re: அழகு குறிப்பு
ungal kurupugal aanaithum migavum super .but i brow valara innum sila tips tharungalen plz. mathapadi anaithum super
Re: அழகு குறிப்பு
Hi, This is bindhu, Yours tips is very nice, i will follow immediately
Re: அழகு குறிப்பு
very good tips ths sidhu
Re: அழகு குறிப்பு
Thank u my friend for ur tips by nisha
Re: அழகு குறிப்பு
good article
Re: அழகு குறிப்பு
first of all thankuk so much for the tips...... i will follow the tips...... i want more tips by hair falls
கைதுறப்பு