தலை முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள்
நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் இவை மூன்றையும் நன்கு சூடுபடுத்தி, சிறுது சூடு தணிந்ததும் முடியின் வேர்க்கால்களில் பஞ்சு உபயோகப்படுத்தி தேய்க்க வேண்டும்.நன்கு அரை மணி நேரம் ஊர விட வேண்டும். இதற்கு முன், முதல் நாள் இரவே வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஊற வைக்கவும்.
மற்றும் வேப்பிலை சிறிது,துளசி சிறிது, செம்பருத்தி இலை சிறிது, பெரிய நெல்லிக்காய்(கொட்டை நீக்கியது) -5, செம்பருத்தி பூ சிறிது, ரோஜா இதழ்கள் சிறிது, ஆரஞ்சு இதழ்கள் (காய வைத்தது)சிறிது,சீயக்காய் பவுடர் சிறிதளவு, ஹென்னா பவுடர் சிறிது இவைகளை சேகரித்து எடுத்து வைத்து கொள்ளவும். எண்ணெய் தலையில் ஊறும் நேரத்தில், நாம் சேகரித்து வைத்துள்ளவைகளை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.பின் அதில் சீயக்காய் பவுடர் மற்றும் ஹென்னா பவுடரை கலக்கவும். எண்ணெய் நன்கு ஊறியதும் நாம் அரைத்த விழுதை முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து தலையில் தேய்க்கவும். இந்த பேக் அரைமணி நேரம் ஊறியதும் ஷாம்பூ போடாமல் குளிக்க வேண்டும்.
இதை மாதம் ஒரு முறை செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல், ஆகியவை குறையும். இதை நான் தவறாமல் செய்து வருகிறேன். நீங்களும் செய்து விட்டு உங்கள் கருத்தை கூருங்கள்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்