இதோ உங்களுக்காக உருக வைக்கும் ஒரு மென்மையான காதல் கதை
பாகம் - 1
கீழே தூரத்தில் மேகங்கள் வானத் தடாகத்தின் தலை கீழ் தாமரைகளாய் மிதந்தன.மேலும் கீழும் அசைவதற்கு இசையாத மேக வீரர்களின் அணிவகுப்புக்கிடையே சத்தத்தைத் துரத்தியபடி நின்ற நிலையிலேயே ஓடிக்கொண்டிருந்தது அந்த விமானம். அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர் சசிகலா மற்றும் அவளது தாய் கவிதாவும்....
அதிகாலைச் சூரியன் மேகம் துளைத்து மெலெழும்பும் காட்சியை சன்னலோரம் அமர்ந்து ரசித்துச் சிலிர்த்தாள் சசிகலா. மேகம் ஓர் அற்புத அனுபவம் தான், வானக் கானகத்தின் வெள்ளை மலைகளாய், வானக் கடல் அலையடிக்காமல் ஒதுக்கிய நுரை மிச்சங்களாய் எவ்வளவு அழகாய் இருக்கிறது. சசிகலாவின் அருகே அமர்ந்து கொண்டு, மேகத்தின் உருவமற்ற உருவங்களை பார்வை விரித்து பார்த்து கொண்டு அமர்ந்த்திருந்தாள் சசிகலாவின் தாய் கவிதா. விமானம் ஓர் அட்சக் கோட்டின் எல்லையில் துவங்கி, சில தீர்க்கமான தீர்க்கரேகைகளைக் கடந்து அமெரிக்கா நோக்கி பறந்து கொண்டிருந்தது. விமானம் இமைக்க மறுக்கும் இறக்கைகளோடு பறந்துகொண்டிருக்க, இருக்கையில் இருந்த சசிகலாவின் நினைவுகளும், சிந்தனைகளும் இறந்த காலத்துக்குள் இமைகளை இறக்காமல் விழித்துக் கிடந்தது. அவள் கடந்த காலத்திற்கு சென்று விட்டாள். இந்த பயணத்தில், வின்சென்ட் மட்டும் அருகில் இருந்திருந்தால் … எத்தனை அற்புத அனுபவமாய் இருந்திருக்கும் ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை வின்செண்ட், நாம் பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டதை.. என்று கவிதா கண்ணீரோடு தன் மனதுக்குள் கிசுகிசுத்தாள்.
பாகம் - 2 அடுத்த செவ்வாய் கிழமை தொடரும்.....
நினைவேறுகிறது…