யாழ் குடாநாட்டில் இரவுநேர ஆராதனைகள்
தீவகம் உள்ளிட்ட யாழ் குடா நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் முழுமையாக அகற்றப்படவுள்ளது. கிறிஸ்மஸ் தின இரவு நேர திருப்பலிப் பூசைகளில் மக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாகவே இந்த ஊரடங்குச்சட்டம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் சந்திரசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத் தினங்களில் மக்களின் இரவு நேர வழிபாட்டுக்கு ஏதுவாக ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துமாறு மாவட்டத்தின் கட்டளைத் தளபதியிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் புது வருட தினத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்குவது குறித்த முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் கிறிஸ்மஸ் தின ஊரடங்குச் சட்டம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்