Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

சறுக்கு மரத்தில் ஸ்ரேயா

ரசித்து மகிழும் ஜனங்கள்



























அடிக்கிற கோடையிலும், ஜில் காற்று வீசுகிறது வேளச்சேரியில். காரணம், நான்கு நாட்களாக ஸ்ரேயாவின் 'ஸ்டேயிங் ஸ்பாட்' இதுதான்!
தோரணை படத்தின் படப்பிடிப்பு வேளச்சேரி உள்ள 'பேராமவுண்ட் பியர்ல்ஸ்' என்ற உயர்ரக அபார்ட்மென்ட்டில் நடந்து வருகிறது. விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை தொடர்ந்து படமாக்கி வருகிறார்கள். இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், கேரவேன்களையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் 'பழகலாம் வாங்க' என்று கெஞ்சாத குறையாக அன்பு செலுத்தி வருகிறாராம் ஸ்ரே! இதன் காரணமாக கேரவேன்களை புறக்கணித்துவிட்டு ஒய்வு நேரத்தில் சிலரது வீட்டுக்கே விஜயம் செய்கிறாராம்.

இதனால் அதிரிபுதிரியாகி கிடக்கிறது அபார்ட்மென்ட். வேடிக்கை என்னவென்றால் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சல்களிலும், சறுக்கு மரங்களிலும் இவர் ஆடுவதை பார்த்து 'அட, வளர்ந்த குழந்தையாட்டம் இருக்காரே' என்று அதிசயிக்கிறார்கள் அபார்ட்மென்ட் வாசிகள்.
குழந்தை வளர்ந்தாதானே குமரியாக முடியும்?


கைதுறப்பு