Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

ஒரு அப்பாவி நடிகன்

காதல் கவிதை


நீ
நான்
நாம்
வரிசையாக உச்சரித்தபின்
அமாவாசையிலிருந்து
பௌர்ணமியை நோக்கிப்
பயணிப்பதாய் ஒரு உள்ளுணர்வு!
உன் சரிகைச் சேலை
என் கவிதைச் சோலை
ஊருக்குப் போகிறேன் என்று
ஊருக்கே கேட்பதாகச்
சத்தமிட்டுச் சொல்லத்தெரிந்த உனக்கு
நீ திரும்பிவந்தது கூடத்தெரியாமல்
பதுங்கியே இரண்டு நாள்
வீட்டுக்குள் இருந்திருக்கிறாய்
எப்படியெல்லாம் நான்
ஏங்குகிறேன் என்று
ஏளனமாய்த் தெரிந்துகொள்ள
மௌனமாய் இப்படியொரு யுத்தியா
நடத்து… உன் நாடகத்துக்கு
நீ இயக்குநர்
நம் நாடகத்துக்கு ஆண்டவன் இயக்குநர்
நான்…..
ஒரு அப்பாவி நடிகன்

கைதுறப்பு